மும்பை குண்டு வெடிப்பு விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட பாகிஸ்தான்.. 'தாவூத் இப்ராஹிம் விவகாரத்தைத் தொடர்ந்து' அடுத்த பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த 11 பேர் தங்கள் மண்ணில் தான் இருக்கிறார்கள் என்று பாகிஸ்தான் அதிரடியாக ஒப்புக் கொண்டுள்ளது.

மும்பை குண்டு வெடிப்பு விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட பாகிஸ்தான்.. 'தாவூத் இப்ராஹிம் விவகாரத்தைத் தொடர்ந்து' அடுத்த பரபரப்பு தகவல்!

இது தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வு முகமை வெளியிட்ட பட்டியலில் பல தீவிரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 880 பக்கங்கள் கொண்ட இந்த பட்டியலில் 1210 தீவிரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

pakistan new update over Mumbai attack related terrorists

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு, படகு வாங்கிக்கொடுத்த முகமது அம்ஜத்கான், படகின் கேப்டன் ஷாகித் கபூர்,  படத்தை இயக்கும் குழுவைச் சேர்ந்தவர்கள் என 9 பேர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

pakistan new update over Mumbai attack related terrorists

இவர்கள் 11 பேரும் தீவிரவாத அமைப்பு என ஐ.நாவால்  பட்டியலிடப்பட்ட லஷ்கர் இ தய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் தங்களது நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்