'எங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது...' 'எங்களை பாத்துக்க காலபைரவன் இருக்கார்...' கைலாசத்திற்கு பிரதமர் ஆகப் போவதாகவும் நித்தியானந்தா அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிசுகிசுக்களுக்கு சொந்தக்காரரான நித்யானந்தா கொரோனா வைரஸ் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி மீண்டும் இளைய தலைமுறையினரிடையே மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

'எங்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது...' 'எங்களை பாத்துக்க காலபைரவன் இருக்கார்...' கைலாசத்திற்கு பிரதமர் ஆகப் போவதாகவும் நித்தியானந்தா அறிவிப்பு...!

யூ டூப்பில் தனது உபதேச வீடியோக்கள் மூலம் இளைஞர்களால் பரபரப்பாக பேசப்பவர் நித்யானந்தா. பாலியல் புகார், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார் என்று சொல்லப்படுகிறது. கர்நாடக காவல்துறை அவருக்கு பிடி வரண்ட் கொடுத்துள்ளது.

நித்யானந்தா தனக்காகவும், தனது பக்கதர்களுக்காகவும் ஈக்வெடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

நித்யானந்தா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்  கொரோனா வைரஸ் பற்றி கூறியுள்ள செய்தி மீண்டும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது

"கொரோனா வைரஸினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால், பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்குப் பாதுகாவலனாக உள்ளார்."

மேலும் நித்யானந்தா உருவாக்கி வரும், புதிய கைலாசத்திற்கு நான் தான் பிரதமர் என்றும் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

NITHAYNANDA