'உன்னோட பெயர் என்ன'?... அப்போ 'நீ பாகிஸ்தானுக்கு போ'... 'இளைஞருக்கு நடந்த கொடூரம்' !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய பெயரை கூறியதற்காக 'நீ பாகிஸ்தானுக்கு போ' என முஸ்லீம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'உன்னோட பெயர் என்ன'?... அப்போ 'நீ பாகிஸ்தானுக்கு போ'... 'இளைஞருக்கு நடந்த கொடூரம்' !

பீகாரின் பெஹுசாராய் மாவட்டத்தில் முகமது காசிம் என்ற இளைஞர்,விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்துள்ளார்.அவர் கும்பி என்ற கிராமத்திற்கு துணிகளுக்கான சலவை தூளினை விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறைத்த ராஜீவ் யாதவ் என்ற நபர் உனது பெயர் என்ன என கேட்டுள்ளார்.அதற்கு முகமது தனது பெயரை கூற,உடனே கோபமடைந்த அந்த நபர்,'நீ பாகிஸ்தானுக்கு போ என முகமது காசிமின் முதுகில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்து போன முகமது காசிம் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த முகமது காசிமை மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார்.உடனே முகமது, ராஜீவ் யாதவை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.இதனிடையே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவர் வீடியோவில் தெரிவிக்க அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்  ராஜீவ் யாதவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

MOHAMMED QASIM, BEGUSARAI, MUSLIM NAME, GO TO PAKISTAN