"முகம் நிறைய 'தாடி'யுடன்,,.. 'லிப்ஸ்டிக்' பூசிக் கொண்டு புகைப்படம் வெளியிட்ட 'இளைஞர்',.. குவிந்த 'பாராட்டு'க்கள்!!!,,.. 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த புஷ்பக் சென் என்ற இளைஞர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிக தாடியுடன் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"முகம் நிறைய 'தாடி'யுடன்,,.. 'லிப்ஸ்டிக்' பூசிக் கொண்டு புகைப்படம் வெளியிட்ட 'இளைஞர்',.. குவிந்த 'பாராட்டு'க்கள்!!!,,.. 'காரணம்' என்ன??

இந்த புகைப்படம் அதிக பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், தான் ஏன் அப்படி ஒரு புகைப்படம் வெளியிட்டேன் என்பது குறித்து அத்துடன் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், '54 வயதான எனது தாயார் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எனது தாயாரை உறவினர்கள் லிப்ஸ்டிக் போட்டதற்காக சிலர் அவமானப்படுத்தினர். 

இதனால், எனது இந்த புகைப்படத்தை அவர்கள் அனைவருக்கும் அனுப்பி விட்டு 'குட் மார்னிங். சீக்கிரம் குணமடையுங்கள்' என குறிப்பிட்டேன். ஒரு விஷயம் தான் எனக்கு மிகப் பெரிய சந்தேகத்தை உண்டு பண்ணியது. எனது தாய் லிப்ஸ்டிக் போட்டதை குறை கூறிய உறவினர்களின் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் அதிக விழிப்புடன் உள்ளவர்கள். ஆனால், எனது தாயாரை குறை கூறிய போது அங்கிருந்த அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

இங்கு நான் ஒரு ஆணாக, முகம் முழுவதும் தாடி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு நிற்கிறேன். இங்குள்ள அனைத்து தாய், சகோதரி, மகள்கள் என அனைத்து பெண்களுக்கான குரலாகத் தான் நான் நிற்கிறேன். தங்களது ஆசைகளை இந்த பாதுகாப்பற்ற சமுதாயத்திற்காக அடக்கிக் கொண்டு நிற்கும் பெண்களுக்காக இங்கு நிற்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவின் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்