Valimai BNS

டியூசன் போய்ட்டு வீட்டுக்கு வந்த மகன்.. ரொம்ப நேரம் தட்டியும் கதவை யாரும் திறக்கல.. உடைத்துச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போலீஸ் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியூசன் போய்ட்டு வீட்டுக்கு வந்த மகன்.. ரொம்ப நேரம் தட்டியும் கதவை யாரும் திறக்கல.. உடைத்துச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த ஷாக்..!

ஹோட்டல் ரூமில் கிடந்த குக்கர் மூடி.. குற்றாலத்தில் சமையல் மாஸ்டர் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ். இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார். இந்த சூழலில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

கணவன்-மனைவி சண்டை

இந்த நிலையில், மகன் நேற்றிரவு டியூசன் சென்றிருந்தபோது தர்மேந்தர்-சரோஜ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கட்டையால் மனைவி சரோஜை தர்மேந்தர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Man hangs self after killing wife in Uttar Pradesh

டியூசன் சென்ற மகன்

இதனை அடுத்து தர்மேந்தரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டியூசன் சென்ற மகன் வீட்டின் கதவை தட்டியபோதும் பெற்றோர் திறக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளான். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை வீட்டிற்கு சென்று மீண்டும் கதவை தட்டியுள்ளான். அப்போதும் கதவை பெற்றோர் திறக்காததால் வீட்டுக்கு வெளியே நின்று அழுதுள்ளான்.

சடலமாக மீட்பு

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரோஜ் ரத்த வெள்ளத்திலும், தர்மேந்தரன் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடையில்லாத உடலின் மேல் வைக்கப்படும் உணவு.. ஏடாகூடமாக யோசித்த ஹோட்டல்..!

UTTAR PRADESH, MAN, WIFE, UP POLICE, HUSBAND, உத்தரபிரதேசம், கணவன்-மனைவி சண்டை

மற்ற செய்திகள்