இறந்த சிறுமியின் 'உடலை' தோண்டி எடுத்து... 50 வயது நபரின் 'வெட்கக்கேடான' செயல்... பகீர் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 50 வயதான நபர் 14 வயதே ஆன சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அதனுடன் உடலுறவு மேற்கொள்ள முயற்சித்த நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இறந்த சிறுமியின் 'உடலை' தோண்டி எடுத்து... 50 வயது நபரின் 'வெட்கக்கேடான' செயல்... பகீர் பின்னணி!

இந்த கொடூரமான சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதியன்று அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலை அங்குள்ள ஒரு ஆற்றின் கரையோரம் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், அடுத்த நாள் மதியம் அந்த சிறுமியின் உடலுடன் ஒருவர் தவறாக நடப்பதை கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர் போலீசாரிடம் அவரைப் பிடித்து கொடுத்தனர்.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபரின் பெயர் அகான் சைக்கியா என்பதும், இறந்த சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சைக்கியாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில கைதிகளை விடுவித்த போது, சைக்கியாவையும் விடுவித்ததாக போலீசார் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சைக்கியாவின் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பெயரில், வழக்குப்பதிவு செய்து சைக்கியாவை போலீசார் சிறையில் அடைத்தனர். இவருக்கு மனநோய் அல்லது உளவியல் ரீதியாக பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிகிறது.

அதே போல கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுதலை கிடைத்து வெளியில் வந்த போது, உயிரிழந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததால் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்பகுதியில் உள்ளவர்களிடையே வதந்தி ஒன்று உள்ளது. எதுவானாலும் விசாரணை முடிந்த பின்னர் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அதனுடன் உடலுறவு கொள்ள  ஐம்பது வயது நபர் முயற்சி செய்த தகவல் அதிர்ச்சியை தரும் நிலையில், முன்னதாக அந்த சிறுமி உயிரோடு இருக்கும் போது அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக கூறப்படும் தகவலும் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்