சுப நிகழ்ச்சியில் நடந்த துயரம்.. பதறிப்போன உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் திருமண நிகழ்ச்சியின்போது ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுப நிகழ்ச்சியில் நடந்த துயரம்.. பதறிப்போன உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய வீடியோ..!

                         Images are subject to © copyright to their respective owners.

மருத்துவ உலகில் பல்வேறு உயரங்களை மனித குலம் அடைந்திருந்த போதிலும், சில எதிர்பாராத சோக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம் வயது மனிதர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை நாம் தொடர்ந்து செய்திகள் வழியாக அறிந்து வருகிறோம். திடீரென கடினமான உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் சோக சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருவதுடன் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்திருக்கின்றனர். ஆனாலும் பலன் இல்லாததால் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே உயிரிழந்தவர் பெயர் ரப்பானி எனவும், அவர் குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை வேலை பார்த்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரப்பானி திருமண நிகழ்ச்சியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

MARRIAGE, HYDERABAD, VIDEO

மற்ற செய்திகள்