பெத்த பொண்ணுங்கன்னு கூட பாக்கலயே... 5 வருஷமா 'இதத்தான்' பண்ணிட்டு இருக்கேன்... யாரும் என்ன 'கண்டுபிடிக்கல'... நடு நடுங்கிப்போன ஊர்மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 5 வருடங்களாக தான் இதை செய்து வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

பெத்த பொண்ணுங்கன்னு கூட பாக்கலயே... 5 வருஷமா 'இதத்தான்' பண்ணிட்டு இருக்கேன்... யாரும் என்ன 'கண்டுபிடிக்கல'... நடு நடுங்கிப்போன ஊர்மக்கள்!

எவ்வளவு தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் கூட மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகளின் தாக்கம் சற்றும் குறையவில்லை என்பது அவ்வப்போது வெளியாகும் தகவல்களினால் தெரிய வருகிறது. அந்த வகையில் மந்திரவாதி பேச்சை கேட்டு தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்ததை தந்தை ஒருவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் என்னும் கிராமத்தை சேர்ந்த ஜும்மா என்பவர் கடந்த ஜூலை 15-ம் தேதி தன்னுடைய 2 மகள்கள் காணாமல் போனதாக மனைவியுடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஜூலை 20-ம் தேதி சிறுமிகள் இருவரும் ஹன்சி-புட்டா என்னும் கால்வாயில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதுபற்றி பஞ்சாயத்தில் கூட்டம் கூட்டி விசாரித்தபோது கடந்த 5 வருடத்தில் தன்னுடைய 5 குழந்தைகளை தான் கொலை செய்ததை  ஒப்புக் கொண்டார். இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் அவரை போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்