"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு!".. வல்லுநர்கள் அதிர்ச்சி!.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களையும், வல்லுநர்களையும் பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு!".. வல்லுநர்கள் அதிர்ச்சி!.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க!

மும்பையிலிருந்து 500 கி.மீ தொலைவில், புல்தானா மாவட்டத்தில் புகழ்பெற்ற லோனார் ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரி கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியைத் தாக்கியதால் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான ஏரி என்று நிலவியல் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் இந்த லோனார் ஏரி, திடீரென பிங்க் நிறத்தில் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஏரி குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,  "உலக அதிசயமாக லோனா ஏரி இ்ப்போது மாறிவிட்டது. பாசிகளால் பச்சை நிறத்தில் இருக்கும் ஏரி பி்ங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. மைக்ரோபயாலஜிஸ்ட்கள் இதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா சுற்றுலா கழகமும் ஏரியின் படத்தை பதிவிட்டு பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளது

இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் கூறுகையில், "லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்கு முன்பும் மாறியுள்ளது என்றாலும், பிங்க் நிறத்தில் முழுமையாக மாறியுள்ளது இதுவே முதல்முறை. இந்த ஏரி உப்பு ஏரியாகும். இந்த நீரில் பிஹெச் அளவு 10.5 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள், மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.

இந்த ஏரியில் ஒரு மீட்டருக்கு கீழ் ஆக்சிஜன் சப்ளை இருக்காது என்பதால் யாரும் குளிக்கமுடியாது. ஈரானில் உள்ள ஏரி போன்ற தோற்றமுடையது. எப்போதெல்லாம் நீர் சிவப்பு நிறத்தில் மாறுகிறோ அப்போது நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்துவிட்டதால், லோனார் ஏரியில் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால், மழைநீர் சேராததால் உப்பின் அளவு அதிகரித்து இதுபோன்ற பிங்க் நிறமாக மாறியிருக்கலாம். நீரில் உள்ள பாசிகள் இறந்து, உப்பின் தன்மை அதிகரிப்பால் நிறம் மாறியிருக்கலாம் என நினைக்கிறோம்.

இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். நி்ச்சயமாக, மனிதர்களால் நிறத்தை மாற்ற முடியாது. இது நீரில் நடக்கும் உயிரியல் மாற்றம்தான். லாக்டவுன் காலத்தில் யாரும் ஏரியின் பக்கம் வந்திருக்க மாட்டார்கள் என்பதால், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். இன்னும் சில வாரங்கள் செல்ல, செல்ல மேலும் மாற்றம் அதிகரிக்கும்"

இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

மற்ற செய்திகள்