கிச்சனில் பிசியாக சமைத்துக் கொண்டிருந்த மனைவி.. "வேக வேகமாக அங்கு வந்த கணவர்.." பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த மனைவி அருகே சென்ற கணவர், திடீரென செய்த செயல் ஒன்று, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

கிச்சனில் பிசியாக சமைத்துக் கொண்டிருந்த மனைவி.. "வேக வேகமாக அங்கு வந்த கணவர்.." பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

சண்டிகர் மாநிலம், லூதியானா பகுதியைச் சேர்ந்தவர் அஜய்பால். இவருக்கும், சிம்ரன்பிரீத் கவுர் என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, தனது கணவர் அஜய்பால் மீது, சிம்ரன்பிரீத் கவுர் அளித்துள்ள புகார் ஒன்று, கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடிக்கடி தகராறு

திருமணம் ஆன நாள் முதலே, மனைவி சிம்ரன்பிரீத் கவுரிடம் வரதட்சணை தொடர்பாக அடிதடி மற்றும் தகராறில் அஜய்பால் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி இருவருக்குள்ளும் சண்டை நடக்க, கணவரை விட்டு விட்டு தனது குழந்தையுடன் உறவினரின் வீட்டிற்கும் சிம்ரன்பிரீத் சென்று தங்கியதாக கூறப்படுகிறது.

கணவர் செய்த செயல்

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சிம்ரன்பிரீத் தங்கி இருந்த வீட்டிற்கு அஜய்பால் வந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கே, சமயலறையில் சமையல் வேலைகளை கவனித்து வந்துள்ளார் சிம்ரன்பிரீத். அப்போது, அங்கு வந்த அஜய்பால், அடுப்பில் இருந்த சூடான எண்ணெயை மனைவியின் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. திடீரென கணவர் செய்த செயலால், சிம்ரன்பிரீத் நிலை குலைந்து போனார். உடனடியாக, அங்கிருந்து அஜய்பால் தப்பித்துச் செல்ல, தனக்கு நேர்ந்த அவலம் பற்றி, மகளிர் ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்து விவரத்தை சொல்லி உள்ளார் சிம்ரன்பிரீத்.

Ludhiana man action to his wife busy in cooking

இதன் பின்னர், அங்கிருந்து மீட்கப்பட்ட சிம்ரன்பிரீத், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடலில் லேசான தீக்காயங்கள் உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, சிம்ரன்ப்ரீத் புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பே அஜய்பால் மீது, மனைவி சிம்ரன்பிரீத் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், அவர்களின் விவாகரத்தும் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

HUSBAND, WIFE, COOKING

மற்ற செய்திகள்