Video: பள்ளிச்சிறுமி பாலியல் 'வன்கொடுமை' செய்யப்பட்டு கொலை... வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டம்... தொடர் பதற்றத்தால் போலீஸ் தடியடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

Video: பள்ளிச்சிறுமி பாலியல் 'வன்கொடுமை' செய்யப்பட்டு கொலை... வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டம்... தொடர் பதற்றத்தால் போலீஸ் தடியடி!

மேற்கு வங்காள மாநிலம் சோப்ரா என்ற பகுதியில் 10-ம் வகுப்பு பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து உள்ளூர் மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

நிலைமை எல்லை மீறியதை அடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இதுகுறித்து போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் சிறுமியை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்