“அவங்க 2 பேரும் என் தங்கச்சிய அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்தது மட்டுமில்லாம”.. இளம் தம்பதி கொலை வழக்கில் ‘திகைப்பூட்டும்’ ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் வீட்டில் இருந்த இளம் தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உறவினர்கள் உடபட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது.

“அவங்க 2 பேரும் என் தங்கச்சிய அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்தது மட்டுமில்லாம”.. இளம் தம்பதி கொலை வழக்கில் ‘திகைப்பூட்டும்’ ட்விஸ்ட்!

அண்மையில் ஹரியானாவைச் சேர்ந்த சுக்பீர் மற்றும் மோனிகா தம்பதியர் திருமணமாகி 8 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல், வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கைதானவர்களுள் ஒருவரான விஷ்ணு(25)வின் உறவினர்களான சுக்பீரும் மோனிகாவும் விஷ்ணுவின் தங்கையை அநாகரிகமாக போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், அதனால், தான் தன் நண்பர்களான சோனு, யாட்டின் மற்றும் குல்தீப் உள்ளிட்டோருடன் சென்று அவர்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

மற்ற செய்திகள்