தோளில் குழந்தை, கையில் கேமரா.. "இந்த பாசத்துக்கு முன்னாடி ஏதாச்சும் ஈடாகுமா?".. மனதை குளிர வைத்த வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவ்வப்போது இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்த செய்திகளை நாம் காண நேரிடும்.

தோளில் குழந்தை, கையில் கேமரா.. "இந்த பாசத்துக்கு முன்னாடி ஏதாச்சும் ஈடாகுமா?".. மனதை குளிர வைத்த வீடியோ!!

                            Image Credit : Sajith_Capz Instagram

Also Read | "ஜஸ்ட் மிஸ்ஸு".. 2007 டி 20 WC ஃபைனல் -ல தோனி போட்ட தப்புக்கணக்கு??.. இத்தனை நாள் கழிச்சு வெளிய வந்த விஷயம்!!

அதே வேளையில், மறுபக்கம் இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் விஷயங்கள், நாளுக்கு நாள் வைரல் ஆகவும் செய்யும். அதிர்ச்சி கலந்த, வினோதமான, மனதை நெகிழ வைக்கக்கூடிய என வித விதமாக பல்வேறு வீடியோக்கள் வைரலாகி இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறும்.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ தொடர்பான செய்தி தான், மக்கள் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கே பெண் ஒருவர் புகைப்பட கலைஞராக நின்றபடி, புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அவர் தன் உடலுடன் சேர்த்து பேபி கேரியரில் குழந்தையை சேர்த்து வைத்தபடி தனது தொழிலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

Kerala Woman taking photos with baby in her shoulder

Image Credit : Sajith_Capz Instagram

குழந்தையை ஒரு பக்கத்தை கவனித்து கொண்டிருக்கும் அதே வேளையில், தனது தொழிலையும் திறம்பட கவனித்து கொண்டிருக்கிறார் அந்த பெண். நடுவே, குழந்தையை தட்டிக் கொடுத்தும் வேலையை சீரியஸாக கவனிக்கும் இந்த பெண்ணின் வீடியோ, Sajith_Capz என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், பலரது பாராட்டுக்களையும் அந்த பெண் பெற்று வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CAPZ MEDIA (@sajith_capz)

Also Read | "நான் சொன்னதுனால தான் அப்பா கூட்டிட்டு போனாரு".. தென்காசி இளைஞர், குஜராத் பொண்ணு விஷயத்தில் அடுத்து வெளியான பரபர தகவல்!!

KERALA, WOMAN

மற்ற செய்திகள்