கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாள் அன்று உயிரிழந்திருக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | மொத்த நகரமே ஒரு கட்டிடம் தான்.. ஸ்கூல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உள்ளேயே இருக்கு.. இப்படியும் ஒரு இடமா.?

கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி ஜெயஷீலா (வயது 24). கடந்த வருடம் ரஞ்சன் - ஜெயஷீலா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு ஜெயஷீலா தனது வீட்டுக்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஜெயஷீலாவிற்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் சிறிய பிறந்தநாள் விழா நடைபெற்றிருக்கிறது.

Kerala woman dies after dupatta struck in running grinder

Images are subject to © copyright to their respective owners.

அதன் பின்னர் அருகில் உள்ள பேக்கரியில் வேலைக்குச் சென்ற ஜெயசீலா கிரைண்டரில் மாவு அரைத்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய துப்பட்டா கிரைண்டருக்குள் சிக்கி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த ஜெயஷீலாவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனிடையே ஜெயஷீலாவின் கணவர் ரஞ்சன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் பணிக்கு சென்ற ஜெயஷீலா துரதிருஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kerala woman dies after dupatta struck in running grinder

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து இது குறித்து தலப்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலப்பாடி காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் தன் பிறந்தநாள் அன்று இளம்பெண் பலியான சம்பவம் தலப்பாடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!

KERALA, WOMAN, STUCK, DUPATTA STRUCK, GRINDER, RUNNING GRINDER

மற்ற செய்திகள்