"ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரிஜித். இவரது மனைவி பெயர் ரீஷா. மேலும் ரீஷா நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார்.

"ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பந்தயத்துக்கு நாங்க வரலாமா?".. 20 நிமிசத்துல இத்தனை கிலோ பிரியாணியா? அசராமல் சாப்பிட்டு 5000 ரூபாய் சம்பாதித்த மனிதர்..!

இதனிடையே, சமீபத்தில் ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, தனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு காரில் மருத்துவமனைக்கும் சென்றுள்ளார் பிரிஜித்.

இந்த நிலையில், காரில் இருந்தவர்கள் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

திடீரென பிரிஜித் மற்றும் ரீஷா உள்ளிட்ட குடும்பத்தினர் சென்ற கார், தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். மறுப்பக்கம், கார் முன் பக்கம் தீப்பிடித்து எரியவும் தொடங்கி உள்ளது. இதனிடையே, கார் தீப்பிடித்ததற்கு மத்தியில் முன்பக்க கதவை திறக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், முன் பக்கம் முழுவதும் தீப்பிடித்ததன் காரணத்தினால் பிரிஜித் மற்றும் ரீஷா ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னால் அமர்ந்திருந்த நான்கு பேர்  சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையிலும் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் பிரிஜித் மற்றும் ரீஷா ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

காரில் எப்படி தீ உருவானது என்பது பற்றிய சரியான காரணங்கள் தெரியாத சூழலில், இந்த விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணி பெண், பிரசவ வலியால் துடித்து மருத்துவமனை சென்ற சமயத்தில் கார் தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம், பலரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

Also Read | "பார்க்க என்னை மாதிரியே இருக்கணும்".. இளம்பெண்ணின் பதற வைக்கும் பிளான்.. போலீசுக்கு வந்த சந்தேகம்.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

KERALA, PREGNANT WOMAN, HUSBAND, CAR

மற்ற செய்திகள்