"மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்".. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளிநாட்டில் இருந்து வந்ததும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நபர் ஒருவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

"மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்".. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷன் (வயது 48). இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், அதே நாள் நள்ளிரவு நேரத்தில் ரமேஷன் வீட்டில் இருந்து நெருப்பு எரிவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பதறியடித்த படி அங்கே சென்று பார்த்துள்ளனர். கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருக்க இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற அவர்கள், என்னவென்று பார்த்த போது பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

அங்கே ரமேஷன், அவரது மனைவி சுலஜா குமாரி மற்றும் மகள் ரேஷ்மா ஆகிய மூவரின் உடலும் கிடப்பதை கண்டு பீதியில் உறைந்து போயுள்ளனர். இதற்கடுத்து, போலீசாருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். தொடர்ந்து, இதற்கான காரணம் பற்றி நடந்த விசாரணையில், விபரீத முடிவை எடுத்து மூவரும் இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

மேலும், ரமேஷனுக்கு பெரும் கடன் இருந்து வந்ததாகவும், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டும் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, வங்கியில் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தனது மகள் மற்றும் மனைவி ஆகியோருடன் விபரீத முடிவை ரமேஷன் எடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சில தினங்களிலேயே இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ள விஷயம், அப்பகுதி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

KERALA

மற்ற செய்திகள்