"கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில், கேரளா மற்றும் டெல்லியில் நடந்த கொலைகள் தொடர்பான செய்தி, இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

"கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!

Also Read | "வயசு 11 தான்".. IQ மதிப்பெண்ணில் ஐன்ஸ்டீன், ஹாக்கிங்கை ஓவர்டேக் பண்ணிட்டாரா? வைரலாகும் சிறுவன்..

கன்னியாகுமரி மாவட்ட தமிழக - கேரளா எல்லை பகுதியில், ஷாரோன் என்ற இளைஞர், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித் திரிந்தும் வந்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமாகி இளைஞர் ஷாரோன் ராஜ் உயிரிழந்து போனார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கடைசியாக காதலி கிரீஷ்மா வீட்டுக்கு சென்றிருந்த ஷாரோன் ராஜ், அங்கே கஷாயம் ஒன்றை குடிக்க அதில் விஷம் கலந்திருப்பதும் உறுதியானது. மேலும், இந்த வழக்கில் கிரீஷ்மா தான் குற்றவாளி என்பதும் உறுதியாகி போலீசார் கைது செய்தனர். ஷாரோன் ராஜை விஷம் வைத்து கொலை செய்ததையும் கிரீஷ்மா ஒப்புக் கொண்டிருந்தார்.

kerala and delhi murder case connection in most areas

இது தொடர்பாக பல்வேறு கட்ட விசரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி இருந்தது. காதலித்த சமயத்தில் ஷாரோன் ராஜூடன் சுற்றித் திரிந்த இடங்களிலும் கிரீஷ்மாவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதே போன்றொரு சம்பவம், சமீபத்தில் டெல்லியிலும் நடைபெற்றிருந்தது. ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனுடன் இரண்டு வருடங்களாக லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக, பெற்றோரை பிரிந்த ஷ்ரத்தா, மும்பையில் தனது வேலையை விட்டு விட்டு, டெல்லியில் உள்ள காதலன் அஃப்தாப்புடன் இணைந்து வாழவும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி, அஃப்தாப்பை ஷ்ரத்தா வற்புறுத்த, இதன் பெயரில் நடந்த மோதலில் காதலியை அஃப்தாப் கொலை செய்துள்ளார்.

kerala and delhi murder case connection in most areas

அது மட்டுமில்லாமல், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, பல இடங்களிலும் வீசிய தகவலும் குலை நடுங்க வைத்துள்ளது. ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி அதில் வைத்து நள்ளிரவில் ஷ்ரத்தா உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் அஃப்தாப் வீசி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இதனிடையே, ஷாரோன் ராஜ் - கிரீஷ்மா மற்றும் அஃப்தாப் - ஷ்ரத்தா விவகாரம் இடையேயுள்ள ஒற்றுமை தொடர்பான செய்தி, வேகமாக பரவி வருகிறது.

kerala and delhi murder case connection in most areas

ஷாரோன் ராஜ் கூட திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதன் பெயரில் தான் கொலை நடந்ததாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே போல தான், ஷ்ரத்தாவும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது தான் அவரை அஃப்தாப் கொலை செய்திருந்தார். இதே போல, இந்த இரண்டு ஜோடிகளின் காதல் கூட விபத்து போல தான் நடந்தது.

அதாவது, பேருந்தில் சென்ற போது தான் ஒருவரை ஒருவர் பார்த்து பார்த்து கிரீஷ்மா மற்றும் ஷாரோன் ஆகியோரிடையே காதல் உருவானது. மறுபக்கம், டேட்டிங் செயலி மூலம் தான் ஷ்ரத்தா - அஃப்தாப் ஆகியோர் பழகி பின்னர் காதலித்துள்ளனர். இது தவிர, கொலை செய்வதற்கு முன், எப்படி அதை சிக்காமல் செய்வது என்பது குறித்தும், கொலை செய்வதற்கான முறைகள் குறித்தும் கிரீஷ்மா இணையத்தில் தேடி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

kerala and delhi murder case connection in most areas

அதே போல, அஃப்தாப் கூட ஷ்ரத்தாவை கொலை செய்வதற்கு முன்பாக, இணையத்தில் கொலை செய்வது குறித்த பல்வேறு விஷயங்களை தேடி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்திருந்தது. இப்படி கேரளா மற்றும் டெல்லியில் நடந்த கொலைகள் நடுவே இருக்கும் ஒற்றுமைகள் குறித்த செய்தி மக்களை இன்னும் பீதி அடைய வைத்துள்ளது.

Also Read | காட்டில் காணாம போன 'நபர்'.. "எங்க தேடியும் கெடக்கலையாம்".. கடைசியில் செல்ல நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!

DELHI, KERALA, KERALA AND DELHI MURDER CASE

மற்ற செய்திகள்