"சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிரஹள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவர், ராம்நகர் மாவட்டம் பிடதி பகுதியில் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

"சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!

இவருக்கு திருமணமாகி மனைவி உள்ள நிலையில், 2 மகள்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 2 மகள்களையும் தங்களது சொந்த ஊரான முக்கிரஹள்ளி கிராமத்திற்கு அனுப்பி வைத்து விட்டு தனது மனைவியுடன் பிடதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரை பெங்களுர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை மகள்களுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். தான் குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், திடீரென சனிக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனை அறிந்த மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான முக்கிரஹள்ளி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மயானம் ஒன்றில் வைத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அப்போது அந்த அதிகாரியின் மூத்த மகள், தனது தந்தைக்கு தானே இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்க கோரினர். அதன்படி, தனது தந்தையின் இறுதி சடங்குகளை அந்த பெண் முழு பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மற்ற செய்திகள்