Kadaisi Vivasayi Others

என்னையா அவாயிட் பண்ற.. 5 பேரையும் உருதெரியாம அழிச்சிடுங்க.. எல்லாம் பண்ணிட்டு பெண் போட்ட டிராமா.. ஹார்ட் பீட்-ஐ எகிற வைக்கும் சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா: கர்நாடகாவிற்கு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலனின் மனைவி உட்பட 5 பேரை கள்ளக்காதலி திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னையா அவாயிட் பண்ற.. 5 பேரையும் உருதெரியாம அழிச்சிடுங்க.. எல்லாம் பண்ணிட்டு பெண் போட்ட டிராமா.. ஹார்ட் பீட்-ஐ எகிற வைக்கும் சம்பவம்

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபாட்டனாவை அடுத்த கே.ஆர்.எஸ் பகுதியில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (30). இந்த தம்பதியருக்கு, ராஜ், கோமல் மற்றும் குணால் ஆகிய மூன்று குழந்தைகளும் இருந்தனர்.

கங்காராம் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வரும் இவர், சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன், கங்காராம் வியாபாரத்திற்கு வேண்டி வெளியூர் சென்றுள்ளார்.

அதிரடி திருப்பம்:

இந்த குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். நகைக்காக கொள்ளையர்கள் இதுப்போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு தான் அதிரடி திருப்பம் ஏற்ப்பட்டு ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தான் இப்படியும் நடக்குமா என பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கள்ளக்காதல் விவகாரம்:

கங்காராம் - லட்சுமி தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள், கங்காராமிற்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்கிற பெண்ணுடன் கள்ளக்காதல் விவகாரம் போய்க் கொண்டிருப்பது மனைவி லட்சுமிக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதால்,  கங்காராம் கள்ளக்காதலியை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது

போட்ட திட்டம்:

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலி லட்சுமி, கங்காராம் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கங்காராம் வேலைக்கு சென்ற நேரத்தில் 2 கூலி படையை வைத்து கங்காராமின் மனைவி, 3 குழந்தைகள் லட்சுமியின் அண்ணன் மகன் உட்பட 5 பேரை தீர்த்துக்கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் லட்சுமி சந்தேகப்படும் வகையில் அழுது நடித்தது காவல் துறையினருக்கு சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. லட்சுமியை கைது செய்த காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்

KARNATAKA, ILLEGAL AFFAIR, கர்நாடகா, கள்ளக்காதல், மனைவி

மற்ற செய்திகள்