‘அவங்க விவசாயிகளே இல்ல.. தீவிரவாதிகள்’.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கங்கனா ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகள் இல்லை, தீவிரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘அவங்க விவசாயிகளே இல்ல.. தீவிரவாதிகள்’.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கங்கனா ட்வீட்..!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kangana Ranaut attacks Rihanna for Farmers protest Tweet

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதாரித்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த ட்வீட் 2 லட்சத்த்துக்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, ரிஹான்னாவை கடுமையாக சாடியுள்ளார்.

அதில், ‘யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்கார், முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல’ என கடுமையாக கங்கனா பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு சமூக வலைதளங்கள் பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்