'சிறுத்தையை கொடூரமாக கொன்ற மனிதர்கள்...' கண், பல், தோல், நகம் எல்லாத்தையும் தனித்தனியா பிய்ச்சு எடுத்து நாசம் பண்ணிருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம் மாநிலத்தில் ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அடித்துக்கொன்று அதன் நகங்கள், பற்கள், தோல்கள் என அனைத்தையும் தனித்தனியா பிய்த்து கொண்டாடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'சிறுத்தையை கொடூரமாக கொன்ற மனிதர்கள்...' கண், பல், தோல், நகம் எல்லாத்தையும் தனித்தனியா பிய்ச்சு எடுத்து நாசம் பண்ணிருக்காங்க...!

அசாம் மாவட்டம் குவஹாத்தி நகரில் கோர்ச்சூக்கின் கட்டாபரி கிராமத்தில் அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கமான சம்பவமாக இருந்துள்ளது. கிராம மக்கள் வன விலங்குகளின் வருகையால் கடும் தொல்லையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அந்த ஊர் மக்கள் விலங்குகளை வலை விரித்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கட்டாபரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியது. விஷயம் தெரிந்த அவ்வூர் மக்கள் சிறுத்தையை காண கூடியுள்ளனர். பெருங்கூட்டத்தை பார்த்த சிறுத்தை  தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த 7 வயது சிறுவனை தாக்கி கடித்துப் பிராண்டி விட்டது.

இதனால் கோபமடைந்த அங்கிருந்த மக்கள் கையில் கிடைத்த பொருளை எல்லாம் சிறுத்தை மீது எறிந்து தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் அதனை தூக்கி ஊர்வலமாக ஊர் முழுவதும் சென்றுள்ளனர். மேலும் சிறுத்தையின் கண்கள், பற்கள், தோல்கள், நகங்களை தனித் தனியாக பிய்த்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்