இந்தியாவுக்கு பெருமிதம்!.. கொரோனா பரிசோதனையில்... Rapid test kits அறிமுகம்!.. இந்த முறை மிஸ் ஆகாது'!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 'அதிரடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரிசோதனை முறையின் நீட்சியாக, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Rapid test கருவிகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு பெருமிதம்!.. கொரோனா பரிசோதனையில்... Rapid test kits அறிமுகம்!.. இந்த முறை மிஸ் ஆகாது'!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 'அதிரடி'!

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் Oscar Medicare என்ற நிறுவனம், Point-Of-Care(POC) rapid பரிசோதனை கருவிகளை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், கொரோனா பரிசோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் தெரிந்துவிடும். மேலும், அதன் விலை, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் POC rapid test கருவிகளை தயாரிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் RT-PCR பரிசோதனை முறையில், முடிவுகள் வெளியாவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். முன்னதாக, rapid test கருவிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டபோது, அவற்றின் பரிசோதனை முடிவுகள் தவறாக இருந்ததால், அவை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்