‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டுக்காக தனது மகன் உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக லடாக்கில் வீரமரணமடைந்த கமெண்டோ அதிகாரியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!

இந்திய எல்லயான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனா படைவீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதில் தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டையை சேர்ந்த சந்தோஷ் பாபு என்ற ராணுவ கமெண்டோ அதிகாரியும் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது மகனின் வீரமரணம் குறித்து தெரிவித்த கமெண்டோ சந்தோஷ் பாபுவின் தாய், ‘ஒரு தாயாக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் என் மகன் நாட்டுக்காக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தான் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என கண்கலங்க தெரிவித்தார்.

மற்ற செய்திகள்