அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன ‘காதல்’ மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதல் மனைவி அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்ற ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன ‘காதல்’ மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

Also Read | ‘ஜிம்மில் வொர்க் அவுட்’.. திடீரென சுருண்டு விழுந்து இறந்த இளைஞர்.. மதுரையில் நடந்த ‘ஷாக்’..!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஹைதராபாத்தில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் சரோஜா தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்த சூழலில், சரோஜாவின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சரோஜாவின் பெற்றோர் வழக்கம் போல தங்களது மகளுக்கு போன் செய்தனர். அப்போது சரோஜாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த சரோஜாவின் பெற்றோர் உடனே அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்ததால் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Hyderabad man hides his wife dead body in water drum

தகவலறிந்து வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தண்ணீர் டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அனில்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்றும், இதை மறைத்து சரோஜாவை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இது சரோஜாவுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் உடற்பயிற்சி செய்யும் கருவியால் சரோஜாவை அனில்குமார் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காதல் மனைவியை கொன்றதை மறைப்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டிலுள்ள டிரம்மில் அடைத்து வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணவர் அனில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். சண்டை போட்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்ற கோபத்தில் மனைவியை கணவர் கொன்று டிரம்மில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஆத்தாடி எம்மாம்பெருசு.. வலையில் சிக்கிய 100 வயதான ராட்சத லாப்ஸ்டர்..வைரலாகும் வீடியோ..!

HYDERABAD, MAN, WIFE, WATER DRUM, WOMAN, LOVE MARRIAGE, HUSBAND

மற்ற செய்திகள்