‘இனி பெண்கள் மீது அத்துமீறி கை வச்சா ஷாக் அடிக்கும்’.. ‘ஸ்மார்ட் வளையல்’ கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆபத்தில் இருக்கும் பெண்களை காக்கும் வகையில் ஸ்மார்ட் வளையலை தெலுங்கானா இளைஞர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

‘இனி பெண்கள் மீது அத்துமீறி கை வச்சா ஷாக் அடிக்கும்’.. ‘ஸ்மார்ட் வளையல்’ கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்..!

தெலிங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த காடி கிரிஷ் மற்றும் சாய் தேஜா என்ற இரு இளைஞர்கள் ஸ்மார்ட் வளையல் ஒன்றை கண்டுபிடித்தியுள்ளனர். ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் இந்த வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது யாராவது பெண்ணை அத்துமீறி தொட்டால், அந்த வளையல் மூலம் அந்த நபருக்கு ஒரு எலெக்ட்ரிக் ஷாக் ஏற்படும், அதேசமயம் பெண் இருக்கும் இடம் குறித்து சிக்னல் மூலம் பெற்றோர் மற்றும் போலிஸார் தெரியப்படுத்திவிடும் என தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் வளையல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SMART BANGLE, HYDERABAD, TELANGANA, WOMENSAFETY