போனை எடுக்காத பெண்.. கதவைத் திறந்து உள்ளே போன பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "ரெண்டு பேரு பக்கத்தில இப்டி ஒன்னும் இருந்திருக்கா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் இந்தியாவின் பல இடங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டிருந்தது. மாறி மாறி ஒருவர் மீது கலர் பொடிகளை தூவியும் மிக கோலாகலமாக பல இடங்களில் ஹோலி கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

போனை எடுக்காத பெண்.. கதவைத் திறந்து உள்ளே போன பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "ரெண்டு பேரு பக்கத்தில இப்டி ஒன்னும் இருந்திருக்கா?"

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பேசாம நான் போயிடவா?" 😂.. புஜாரா பவுலிங் பார்த்து அஸ்வின் போட்ட கமெண்ட்.. பதிலுக்கு அவர் சொன்ன விஷயம் தான் அல்டிமேட்!!

இதனிடையே ஹோலி பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்பி இருந்த தம்பதி ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம், பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

மும்பையை அடுத்துள்ள காட்கோபர் என்னும் பகுதியை சேர்ந்தவர் தீபக் ஷா. இவரது மனைவி பெயர் ரீனா. இதில் தீபக் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே சமீபத்தில் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன்  ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பி இருந்த தீபக் மற்றும் ரீனா ஆகியோர், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அந்த வீட்டில் பணிப்பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி பார்த்த போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது. மேலும் ரீனாவிற்கு போன் அழைத்தும் அவர் எடுக்காததால், டூப்ளி0கேட் சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்ற போது தான் ரீனா மற்றும் தீபக் ஆகிய இருவரும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு போலீசாரிடமும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். தொடர்ந்து போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை முயற்சி, மின்சார ஷாக் ஆகியவற்றின் காரணமாக மரணங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறலோ, வெளிப்புற காயங்கள் எதுவும் மரணத்திற்கு காரணம் இல்லை என்பதும் தெரிய வந்த சூழலில் குளியல் அறையில் ஹீட்டர் இருந்த போதும் அது ஆனில் இல்லை என்பதால் கேஸ் லீக்காகி உயிரிழக்க வாய்ப்பு குறைவு என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே போல, அவர்கள் இருவரின் உடல் பாகங்களைக் கொண்டு வேறு ஏதேனும் விஷ பொருளை அவர்கள் எடுத்துள்ளார்களா என்பதை சோதனை செய்வதற்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறும் சூழலில், அவர்கள் சடலத்திற்கு அருகே குளியல் அறையில் வாந்தி போன்ற பொருளும் கண்டெடுக்கப்பட்டு அதையும் சோதனைக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே ரீனா மற்றும் தீபக் ஆகியோர் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக சுமார் ஆறு மணி நேரம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்த விசாரணையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு திரும்புவதாக கூறிவிட்ட போதிலும், அந்த நேரத்தில் இருந்து ஆறு மணி நேரம் கழித்து தான் தான் அவர்கள் வந்துள்ளதாக அங்கிருந்த வாட்ச்மேன் தெரிவித்துள்ளார். அங்கே உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத சூழலில் அந்த ஆறு மணி நேரம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் தற்போது போலீசார் மத்தியில் மர்மத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | 35 வருஷம் கழிச்சு ரீயூனியன்.. பார்த்ததும் மலர்ந்த பழைய காதல் .. கேரள ஜோடி எடுத்த பரபரப்பு முடிவு..

MUMBAI, HUSBAND, WIFE, HOLI CELEBRATIONS

மற்ற செய்திகள்