"மொத்தம் 7 பேரு... 'சத்தம் போட்டா கூட காப்பாத்த யாருமில்ல"... இளம்பெண்ணுக்கு இடைவிடாது நேர்ந்த 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹிமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா என்னும் மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன், பனோய் என்ற பகுதியில் நின்றுள்ளார்.

"மொத்தம் 7 பேரு... 'சத்தம் போட்டா கூட காப்பாத்த யாருமில்ல"... இளம்பெண்ணுக்கு இடைவிடாது நேர்ந்த 'கொடூரம்'!!!

அப்போது அந்த வழியாக காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணிற்கு லிப்ட் கொடுப்பதாக ஏமாற்றி வண்டியில் ஏற்றியுள்ளனர். ஆனால், அந்த 7 கயவர்களும் பெண்ணை ஏமாற்றி அவருக்கு தெரிந்த பண்ணை வீடு ஒன்றிற்கு அடாவடியாக ஏற்றிச் சென்றுள்ளனர். உதவிக்கு கூட யாரும் இல்லாத ஒரு சூழலில், அந்த பெண்ணை மாறி மாறி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதோடு விட்டு விடாமல், மற்றொரு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கயவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில், வெவ்வேறு கிராமத்தில் மறைந்து இருந்த 7 பேரையும் கைது செய்தனர்.

அதே போல, சம்மந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மற்ற செய்திகள்