'ரோட்டுல லாரி போய்கிட்டு இருக்கப்போ...' 'டிரைவருக்கு குறி வைக்கப்பட்ட ஹன் பாய்ண்ட்...' 'உள்ள இருந்தது பென்ஸ் கார்...' என்ன நடந்தது...? - உச்சக்கட்ட திகில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தில் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை நான்கு மணி நேரத்தில் காவல்துறையினர் தேடி கண்டுப்பிடித்துள்ளனர்.

'ரோட்டுல லாரி போய்கிட்டு இருக்கப்போ...' 'டிரைவருக்கு குறி வைக்கப்பட்ட ஹன் பாய்ண்ட்...' 'உள்ள இருந்தது பென்ஸ் கார்...' என்ன நடந்தது...? - உச்சக்கட்ட திகில்...!

ஹரியானா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 பென்ஸ் கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரியை வழிமறித்த கும்பல் ஒன்று அதன் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி லாரியை கடத்தியுள்ளனர்.

பின்பு ஓட்டுனரை கயிற்றால் கட்டிப்போட்டு லாரியை எடுத்து சென்றுள்ளனர். சாலையில் இதைக் கவனித்த மக்களில் சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

அப்போது நுஹ் மாவட்டத்தில் வசிக்கும் ரஸாக் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி சென்றுக் கொண்டிருந்த தடம் கண்டறியப்பட்டது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த போலீசார் கொள்ளைக் கும்பலை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 5 கார்களையும் போலீசார் உடனடியாக மீட்டனர். இதுதொடர்பாக கொள்ளைக் கும்பலிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்