'சிக்கன் மசாலா'னு நினைச்சு பூச்சி மருந்து கலந்த பாட்டி...! 'ஆசையா பேரப்பிள்ளைங்க சிக்கன் சாப்ட்ருக்காங்க...' 'சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலையே...' நெஞ்சை உறைய செய்யும் விபரீதம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திரா மாநிலத்தில் சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை கலந்து செய்த சிக்கன் குழம்பை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

'சிக்கன் மசாலா'னு நினைச்சு பூச்சி மருந்து கலந்த பாட்டி...! 'ஆசையா பேரப்பிள்ளைங்க சிக்கன் சாப்ட்ருக்காங்க...' 'சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலையே...' நெஞ்சை உறைய செய்யும் விபரீதம்...!

பேரக்குழந்தைகள் வீட்டுக்கு வந்த குஷியில் பாட்டி கோவிந்தம்மா ஆசையாகா சிக்கன் எடுத்து சமைத்துள்ளார்.

சமைத்துக் கொண்டிருக்கையில் சிக்கன் மசாலா பொடி என்று நினைத்து பூச்சி மருந்தை குழம்பில் கலந்துள்ளார். சமைத்து முடித்துவிட்டு மூவரும் சிக்கன் குழம்பை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்சம் நேரத்தில் பாட்டி மற்றும் பேர குழந்தைகள் இரண்டு பேரும் சிறுது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். நீண்ட நேரமாக கோவிந்தம்மா வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்பதை அருகாமையில் உள்ளவர் உணர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பேரக்குழந்தைகள் இரண்டு பேரும் அங்கேயே உயிரிழந்து உள்ளனர். பாட்டி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்