ஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு!'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல தனியார் நிறுவனமான ஓயோ (OYO) ஹோட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட்டெடு நிறுவனர் ரிதேஷ் அகர்வால் உள்ளிட்ட 2 பேர்  மீது மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி சண்டிகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு!'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு!

இதுபற்றி விகாஷ் குப்தா என்பவர் அளித்துள்ள புகாரில் திருமண நிகழ்ச்சிகளுக்கான ரிசார்ட்டை நடத்திவரும் தனது நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறியதுடன், உரிய கால அவகாசம் வழங்காமல்  வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஓயோ நிறுவனத்தின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்