தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார்..!

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா, உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (04.12.2021) காலை ரோசய்யா உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Former Governor of Tamil Nadu Rosaiah passed away

ரோசய்யா, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். இதனை அடுத்து அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் ஆளுநராக ரோசய்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ROSAIAH

மற்ற செய்திகள்