'14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா...' 'வயிற்று வலின்னு போய் செக் பண்ணினப்போ தான் அந்த இடி விழுந்துருக்கு...' நிலை குலைந்து போன அம்மா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் தந்தையே தன் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் இந்தியாவை உலுக்கும் மற்றொரு பாலியல் வன்கொடுமையாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு அசாதாரண சூழலில் வாழ்ந்து வந்தாலும், ஒரு சிலரின் வக்கிர எண்ணத்திற்கு முடிவே இல்லாமல் செல்கிறது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், குடும்ப வன்கொடுமைகளும் குறைந்தப்பாடில்லை, அதன் விகிதம் இன்னும் அதிகரிப்பதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கும் சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் டுண்டிகள் பகுதியில், 14 வயது சிறுமி கடந்த சில வாரங்களாகவே வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின் 14 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மாவிற்கு மேலும் ஒரு இடியாக இதற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் மருத்துவர்கள் அதற்கு உடன்படவில்லை.
14 வயது சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய, சிறுமியின் தந்தையின் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் நடந்தது என தெரிவிக்கபட்டுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS