உலக புகழ் பெற்ற ‘பாப்’ பாடகி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்.. அடுத்த நிமிஷமே இந்தியர்கள் தேடிய ‘அந்த’ வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

உலக புகழ் பெற்ற ‘பாப்’ பாடகி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்.. அடுத்த நிமிஷமே இந்தியர்கள் தேடிய ‘அந்த’ வார்த்தை..!

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு போராட்டம் நடந்துவரும் பகுதியில் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டு மீண்டும் அளிக்கப்பட்டது.

Farmers protest: Rihanna Asks, Why aren't we talking about this?

இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசம்-டெல்லி காசிபூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து சாலையில் ஆணிகளை போலீசார் புதைத்து வைத்துள்ளனர். விவசாயிகள், டிராக்டர்கள் அந்த இடத்தை கடந்த வரமுடியாத அளவிற்கு போலீசார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிரபல பாப் பாடகி ரிஹான்னா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ‘நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளார். 101 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ள ரிஹான்னாவின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Farmers protest: Rihanna Asks, Why aren't we talking about this?

ரிஹான்னாவின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் பதிவிட்ட சில நிமிடங்களில், ‘ரிஹன்னா மதம் என்ன?’ என்று இந்தியர்கள் பலர் கூகுளில் தேடியுள்ளனர்.

மற்ற செய்திகள்