வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் வந்த வினை.. தோழிகளுக்குள் முற்றிய சண்டை.. இரவில் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் வந்த வினை.. தோழிகளுக்குள் முற்றிய சண்டை.. இரவில் நடந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி தேவி பிரசாத் (48 ). இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில்,  லீலாவதியின் மகள் நேற்று முன் தினம் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதை அப்பெண்ணின் தோழி பார்த்துள்ளார். ஏற்கனவே லீலாவதியின் மகளுக்கும், அவரது தோழிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்ததும் தன்னைப்பற்றி எழுதியதாக நினைத்து வருத்தம் அடைந்துள்ளார் அப்பெண். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளம்பெண்ணின் தாய் உள்பட குடும்பத்தினர் சிலர் லீலாவதி தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தொடர்பாக லீலாவதி தேவி, அவரது மகள் மற்றும் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் குடும்பத்தினர் லிலாவதி தேவி மற்றும் அவரின் குடும்பத்தினரை உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் லிலாவதி தேவி படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்திய இளம்பெண்ணின் குடும்பத்தினர் லீலாவதி வீட்டில் இருந்து தப்பியோடினர்.

படுகாயமடைந்த லீலாவதி தேவி சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், லீலாவதி தேவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணின் தாயார் உள்பட குடும்பத்தினர் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

MUMBAI, POLICE INVESTIGATION, WHATSAPP STATUS, TWO FRIENDS, FAMILY PROBLEMS

மற்ற செய்திகள்