குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு… ஆயிரக்கணக்கில் வாரிச்சுருட்டிய போலி சாமியார் கைது..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குடும்பப் பரிச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தித் தருவதாகக் கூறி பெண்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு… ஆயிரக்கணக்கில் வாரிச்சுருட்டிய போலி சாமியார் கைது..!

தெலங்கானா மாநிலம் அனந்தபூரில் மந்திர தந்திரங்கள் செய்து பூஜை செய்வதாக சிவசாமி என்ற சாமியார் இருந்துள்ளார். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் காமதானம் பகுதியில் வீட்டில் காளி தேவி சிலையை வைத்து அந்த போலி சாமியார் பூஜை செய்து வந்துள்ளார். மந்திரம், மாந்திரீகம் செய்வதாக அக்கம்பக்கத்து பெண்கள் அந்த போலி சாமியாரைத் தேடி வரத் தொடங்கி உள்ளனர்.

குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு வரும் பல பெண்களிடமும் பூஜைகள் செய்வதாகக் கூறி பணம் வாங்கி உள்ளார். பல பெண்களிடம் இதைத் தொடர்ந்து வாடிக்கையாக பணம் வாங்குவது மாந்திரீகம் செய்துவிட்டதாகக் கூறுவது என வாழ்ந்துள்ளார் சிவசாமி. அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது குடும்பப் பிரச்னைக்காக சிவசாமியைத் தேடி வந்துள்ளார்.

சிவசாமியும் அனைத்து பிரச்னைகளையும் கேட்டுவிட்டு அதற்கான பரிகாரங்கள், பூஜைகள் செய்வதாக ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். அந்த இளம் பெண்ணும் பணம் செலவழித்து சாமியரின் வீட்டில் பூஜை செய்துள்ளார். ஆனால், பூஜை முடிந்த பின்னர் தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார் சிவசாமி. ஒரு கட்டம் வரையில் தொடர்ந்து பணம் கொடுத்து வந்த பெண்ணிடம் அதிகப்படியான தொகையைக் கேட்டுள்ளார் சிவசாமி.

தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்த அந்த இளம் பெண் கடைசியாக அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிவசாமியைக் கைது செய்த போலீஸார் அவர் ஒரு போலி சாமியார் என்பதையும் மக்களிடம் தெரிவித்துள்ளனர். தற்போது போலீஸார் விசாரணை வளையத்துக்குள் சிவசாமி சிக்கியுள்ளார்.

MONEY, FAKE GODMAN, TELANGANA, MONEY FRAUD, மந்திரவாதி, போலி சாமியார்

மற்ற செய்திகள்