தண்ணீரில் கலந்து குடிக்கும் '2DG' கொரோனா மருந்தை... யாரெல்லாம் யூஸ் பண்ண கூடாது...? - drdo வெளியிட்டுள்ள தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தை உபயோகபடுத்தும் முறை குறித்தும், யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

தண்ணீரில் கலந்து குடிக்கும் '2DG' கொரோனா மருந்தை... யாரெல்லாம் யூஸ் பண்ண கூடாது...? - drdo வெளியிட்டுள்ள தகவல்...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து பலவிதங்களில் கண்டறிந்து வந்த நிலையில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து, மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி, 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது. தற்போது புதிய தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இதன் விலை 990 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தினை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிய்வு நோயாளிகள், மாரடைப்பு, கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சாதாரண முதல் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சம் 10 நாட்கள் வரைதான் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்