'என்ன வெயில் அடிச்சாலும்...' 'சார் சட்டை போட்டுட்டு தான் வெளிய கெளம்புவாரு...' அதுவும் கேஷுவல் டிரஸ் தான் ஃபேவரைட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெரும்பான்மையான வீடுகளில் குழந்தைகளை தவிர அதிக ஆதிக்கம் செலுத்துவது அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தான். அதும் அவை நாய் என்றால் அவ்வளவுதான். 

'என்ன வெயில் அடிச்சாலும்...' 'சார் சட்டை போட்டுட்டு தான் வெளிய கெளம்புவாரு...' அதுவும் கேஷுவல் டிரஸ் தான் ஃபேவரைட்...!

இதேபோல் புதுச்சேரியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் எப்போதும் மனிதர்கள் போல ஆடை உடுத்திக்கொண்டு தான் இருக்குமாம். மனிதர்களுக்கே ஒரு சில நேரங்களில் கோடைக்காலங்களில் ஆடை மீது வெறுப்பு வந்தாலும், இந்த நாய் மட்டும் உடை அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வருமாம்.

புதுச்சேரி மாவட்டம், குமரகுருப்பள்ளத்தை சேர்ந்த அசோக் என்பவரின் வளர்ப்பு நாய் தான் டாமி. டாமிக்கு ஒரு முறை பேன்ட், டி சர்ட் அணிந்து அசோக் அழகு பார்த்துள்ளார். ஆடை பிடித்துப்போன டாமி அதிலிருந்து தினமும் பேன்ட், டி சர்ட் அணியாமல் டாமி நாய் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை.

டாமியை பார்க்கவே அப்பகுதி மக்கள் கூட்டமாக கூடும் நிகழ்வும் நடந்துள்ளது. பகலில் டாமி தன் உடைகளை கழற்ற விடவே விடாதாம். இரவு, நேரத்தில் உறங்கும் சமயத்தில் மட்டும்தான் உடைகளை கழற்ற அனுமதிக்கிறதாம்.

டாமிக்கென்று தனியே ஒரு அலமாரியையே வைத்துவிட்டாராம் அசோக். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்