நீங்க இப்படி கூடு கட்டினா.. பறவைகள் வந்து அதுல வாழுமா? கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்த பறவைக் காதலன்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி என்பவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார்.

நீங்க இப்படி கூடு கட்டினா.. பறவைகள் வந்து அதுல வாழுமா? கேலி பேசியவர்களின் வாயை அடைக்க வைத்த பறவைக் காதலன்

வடகொரிய அதிபர் வெறுக்கும் ஒரு பாறை.. அந்த தீவு மேல அப்படி என்ன தான் கடுப்பு? எல்லா ஏவுகணையையும் அங்கையே அனுப்புறாரு

அழிந்து வரும் உயிரினங்கள்:

இந்த உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை பிற உயிரினங்களுக்கும் உள்ளது. ஒரு உயிரினம் அழிகிறது என்றால் பூமி சமநிலை பிறழ்கிறது என்று சொல்லலாம். காடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் தொடர்ச்சியாக நிறைய பறவை இனங்கள், அரிதான பூச்சியினங்கள், விலங்கினங்கள் அழிந்து வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். முன்பு இருந்த பறவையினங்கள் பல அழிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கதிர்வீச்சுகள் நிறைய பறவை, பூச்சியினங்களை அழித்து விட்டதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான தரவுகள் இல்லை என மறுப்பவர்களும் உண்டு.

கூடுகள் கட்டும் பறவை காதலர்:

இயற்கை வளங்கள், காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுவாழ் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மனிதர்கள் பல ஆபத்துக்களை சந்திப்பதும் நடக்கிறது. பூமியில் இவ்வளவு அழிவுகள் நடந்தாலும் இயற்கையின் மீதும், பறவை விலங்கினங்கள் மீதும் பரிவு காட்டும் வெகுசில நபர்கள் இருக்க தான் செய்கின்றனர். அப்படி ஒரு நபர் தான் டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி. இவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார்.

Delhi nest man built a record two and a half lakh bird nests

ஏராளமான விருதுகள்:

இவர் ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பறவைகளுக்காக கூடுகள் கட்டுவதை அவர் சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொண்டார். சணல், புல், பிளாஸ்டிக், மரம் போன்றவை கொண்டு அவர் கூடுகளைக் கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கும் பறவைகளுக்காக வீட்டின் மாடியிலும் பால்கனியிலும் தோட்டத்திலும் கூடுகள் கட்டுவதற்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார்.

தொடக்கத்தில் இதை பலர் கேலியாகப் பார்த்தனர். இவர் கூடு கட்டி  விட்டால் அதில் குடியிருக்க பறவைகள் வந்து விடுமா என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் கட்டிய கூடுகளுக்குப் பறவைகள் வரத்தொடங்கியதும் அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

சாப்பிட்ட உடனே டயர்டு ஆகுது.. 7 வருஷமா மனைவியின் சமையலில் மறைந்திருந்த ரகசியம்.. கிச்சனில் கேமரா மாட்டிய கணவனுக்கு.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை

Delhi nest man built a record two and a half lakh bird nests

DELHI NEST MAN, BUILT A RECORD, BIRD NESTS, டெல்லி, பறவை, பறவை காதலர்

மற்ற செய்திகள்