'நான் தடுப்பூசி போட்டுகிட்டேன் மா'... 'லைவ் வீடியோவில் பேசி கொண்டிருந்த டாக்டர்'... 'அடுத்த செகண்ட் மனைவி கேட்ட கேள்வி'... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியைச் சேர்ந்த மூத்த மருத்துவர்  ஒருவர், காரில் இருந்து கொண்டே தனது மனைவியுடன் மொபைல் போனில் உரையாடும் வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

'நான் தடுப்பூசி போட்டுகிட்டேன் மா'... 'லைவ் வீடியோவில் பேசி கொண்டிருந்த டாக்டர்'... 'அடுத்த செகண்ட் மனைவி கேட்ட கேள்வி'... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளிலுள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ கேகே அகர்வால் கொரோனா தடுப்பூசியை எடுத்துள்ளார்.

இதனையடுத்து, அவர் தனது காரில் இருந்து கொண்டே லைவ் வீடியோவில் இருந்த போது, அவரது மனைவி தொலைபேசியில் அழைத்துள்ளார். மனைவியிடம் லைவ் வீடியோவில் இருந்து கொண்டே அகர்வால் பதில் பேசியுள்ளார். தனியாக தடுப்பூசி செலுத்துக் கொண்டு வந்ததால் அகர்வாலின் மனைவி, கணவர் மீது கோபமடைந்துள்ளார். 'ஏன் என்னை நீங்கள் அழைத்துச் செல்லவில்லை. நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை. என்னிடம் பொய் தானே கூறுகிறீர்கள்?' என மனைவி கேள்வி எழுப்புகிறார்.

தனது மனைவியை இன்னொரு நாள் தடுப்பூசி செலுத்த அழைத்துச் செல்லலாம் என அகர்வால் கூறும் நிலையில், தான் அங்கே கண்காணிக்க சென்றதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியதால் தான் செலுத்திக் கொண்டதாகவும் அகர்வால் பதில் தெரிவிக்கிறார். இருந்த போதும், மனைவி நம்பாமல் பதிலுக்கு கோபத்துடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

தான் லைவ் வீடியோ இருப்பதை அகர்வால் தனது மனைவியிடம் தெரிவித்ததையடுத்து, 'நான் இப்போதே லைவ் வீடியோவில் வந்து உங்களை சந்திக்கிறேன்' என கூறிவிட்டு மனைவி அழைப்பை துண்டிக்கிறார்.

இந்த வீடியோ நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த நினைத்தால் மனைவியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் இப்படி தான் நடக்கும்' என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்