‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

துபாயில் உள்ள மனைவி கேரளாவில் உயிரிழந்த கணவரின் உடலை வீடியோ காலில் பார்த்து கதறி அழுதுள்ளார்.

‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி  ஸ்ரீஜித் - பிஜிமோல். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜித் 9 மாதங்களாக சக்கர நாற்காலி உதவியுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தேவைகள் மற்றும் கணவரின் சிகிச்சைக்கான பணத்திற்காக பிஜிமோல் துபாய்க்கு வேலைக்காக செல்ல தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து தெரிந்தவர்களிடம் இருந்து ரூ 3 லட்சம் கடனாக வாங்கி அதை ஏஜென்ட் ஒருவரிடம் கொடுத்து அவர் மூலமாக துபாய்க்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் வேலைக்கான விசாவிற்கு பதிலாக ஒரு மாத காலமே செல்லுபடியாகும் சுற்றுலா விசாவை கொடுத்து அந்த ஏஜென்ட் ஏமாற்றியது பிஜிமோலுக்கு தெரியவந்துள்ளது. இருப்பினும் குடும்பத்தின் சூழ்நிலையால் அங்கேயே தங்கி சிலரின் உதவியுடன் பிஜிமோல் வேலை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் திருமண நாளான நேற்று முன்தினம் ஊரிலிருந்து பிஜிமோலுக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய உறவினர்கள் அவருடைய கணவர் இறந்துவிட்டதாக கூற, அதைக்கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீஜித்தின் இறுதிச் சடங்கு பிஜி இல்லாமலே நடக்க, கணவருடைய உடலை வீடியோ காலில் பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். வீடியோ காலில் கணவரைப் பார்த்து அழுதுகொண்டே இருந்த அவரை சமாதானப்படுத்த முடியாமல் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தம்பதியின் 3 பெண் குழந்தைகளும் தற்போது உறவினர் ஒருவருடைய வீட்டில் தங்கியுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலில் இருக்கும் கேரள மக்களை இந்தச் சம்பவம்  மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

KERALA, CORONAVIRUS, LOCKDOWN, HUSBAND, WIFE, DAUGHTERS, VIDEOCALL, CANCER, DUBAI