'கொரோனா தடுப்பூசி வரப்போகுது... எல்லாரும் ரெடியா இருங்க'!.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!.. யாருக்கு எப்படி கிடைக்கும்?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

'கொரோனா தடுப்பூசி வரப்போகுது... எல்லாரும் ரெடியா இருங்க'!.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!.. யாருக்கு எப்படி கிடைக்கும்?.. முழு விவரம் உள்ளே

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, "மருத்துவ வல்லுநர்கள் ஒப்புதல் தெரிவித்த உடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது துவங்கும்.

சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க சிறப்பான கட்டமைப்பு உள்ளது.

கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது.

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்