மொத்தம் 40 பெண்கள்..92 'செக்ஸ்' வீடியோக்கள்..மாநிலத்தை 'உலுக்கும்' பாலியல் வழக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் கடந்த வாரம் புகார் ஒன்றை பலசியா காவல் நிலையத்தில் அளித்தார்.அதில் தன்னுடன் இரண்டு பெண்கள் உறவு வைத்துக்கொண்டனர். தற்போது வீடியோவை வைத்து தன்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.பலமுறை அவர்களுக்கு பணம் கொடுத்து விட்டேன் எனவும் கூறியிருந்தார்.

மொத்தம் 40 பெண்கள்..92 'செக்ஸ்' வீடியோக்கள்..மாநிலத்தை 'உலுக்கும்' பாலியல் வழக்கு!

இதனையடுத்து போலீசார் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அந்த பெண்களை வரவைக்குமாறு அவரிடம் சொல்லி பொறிவைத்து அந்த பெண்களை பிடித்தனர். விசாரணையில் மேலும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்த வழக்கு மிகப்பெரிய பூதாகரமாக தற்போது உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் சுமார் 40 பெண்கள் வரை சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என பலரும் இதில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக தனிப்படை ஒன்றையும் போலீசார் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண்களிடம் இருந்து இதுவரை சுமார் 92 வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.மேலும் வீடியோ வைத்து மிரட்டி இதுவரை இவர்கள் ரூ.15 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர் எனக் கூறியுள்ள போலீஸார் முதல்கட்டமாக அவர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாய் அளவில் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், இரண்டு லேப்டாப், 8 சிம் கார்டுகள் மற்றும் சொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தையே ஒட்டுமொத்தமாக மிரட்டியுள்ள இந்த வழக்கில் சிக்கிய ஐந்து பெண்களும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல சர்ச்சைகள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.