'என்னடா இது கூட்டத்தை பொளந்திட்டு வருது'... 'ஆளே இல்லாமல் வந்த புல்லட்'... 'அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள்'... பகீர் கிளப்பும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுமார் 300 மீட்டர் தொலைவு வரை அந்த பைக் சென்றது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

'என்னடா இது கூட்டத்தை பொளந்திட்டு வருது'... 'ஆளே இல்லாமல் வந்த புல்லட்'... 'அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள்'... பகீர் கிளப்பும் வைரல் வீடியோ!

சில நேரம் சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடந்து விடுகிறது. சொல்லப்போனால் சினிமாவை மிஞ்சும் அளவிற்குக் கூட நடந்து விடுகிறது. தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அளவில் புல்லட் மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநர் இன்றி தனியாகச் சாலையில் சென்று கொண்டிருந்தது.

Bullet runs on Pune-Nashik highway without a rider

இதனைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் மோட்டார் சைக்கிளை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் 300 மீட்டர் தொலைவு வரை சென்ற மோட்டார் சைக்கிள் வழியில் நடந்து சென்ற ஜனார்தன் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் காயமடைந்தார்.

Bullet runs on Pune-Nashik highway without a rider

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் ஆள் இன்றி மோட்டார் சைக்கிள் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்