திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடிக்கடி திருமணத்தை சுற்றி நடைபெறும் ஏராளமான செய்திகள் பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!

Also Read | "பாலைவனம் நடுவுல விமானமா?.. இது எப்படி பாஸ் இங்க?".. 20 வருஷம் கழிச்சும் நீடிக்கும் மர்மம்?!

ஒரு பக்கம், திருமண மேடையில் நிறைய கலகலப்பான விஷயங்கள் அரங்கேறும் அதே வேளையில், ஒரு சில சமயம் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவங்கள் கூட அரங்கேறி விருந்தினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.

உதாரணத்திற்கு திருமண மேடைக்கு மணமகன் தாமதமாக வந்ததால் வேறு ஒரு நபருக்கு மணப்பெண்ணை திருமணம் செய்து வைத்தது, குடித்து விட்டு திருமணத்திற்கு மாப்பிள்ளை வந்ததால் திருமணம் பாதியில் நின்று போனது என நிறைய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து பெரிய அளவில் வைரலாகவும் செய்யும். அந்த வகையில் ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் வைத்து ஹரியானா கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமார் யாதவ் என்ற நபருக்கும் தவாய்குர்ட் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி, திருமணம் படு அமர்க்களமாக நடந்து முடிந்த நிலையில், குடும்பத்தினர் அனைவரும் மிக விமரிசையாக இதனை கொண்டாட்டம் போலவும் ஆக்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் தான், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. மணமக்கள் இருவரும் மேடையில் இருக்க, திருமண நிகழ்விற்கு இடையே பெண் ஒருவர் குழந்தையுடன் அங்கே வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த குழந்தைக்கு தந்தை மாப்பிள்ளை தான் என்றும் அவர் கூற, மணமகள் உள்ளிட்ட அங்கே இருந்த ஒட்டுமொத்த பேரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிகழ்வால், பெண் வீட்டார் அதிர்ந்து போக, மாப்பிள்ளை கிஷோரின் குடும்பத்தினரிடம் கேட்ட பிறகு தான் உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது, கிஷோருக்கு குழந்தையுடன் அங்கே வந்த பெண்ணிற்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, இரு வீட்டாருக்கும் இடையே அங்கே வாக்குவாதமும் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டார் காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை அளிக்க, போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்தை நிறுத்தவும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதே போல, மாப்பிள்ளையின் தம்பியை திருமணம் செய்யவும் மணப்பெண் முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதே திருமண மேடையில் முன்பு நிச்சயமான மாப்பிள்ளையின் சகோதரனையும் அந்த பெண் திருமணம் செய்துள்ளார்.

Also Read | "நாங்க பெற்றோராக போறோம்".. ஆண் தம்பதி மகிழ்ச்சி பதிவு.. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!!

UTTARPRADESH, BRIDE, MARRIED, GROOM, BROTHER, WEDDING DAY

மற்ற செய்திகள்