‘நடிக்க சான்ஸ் தர்றேன்’... ‘ஆசைகாட்டி, தயாரிப்பாளர் செய்த பகீர் காரியம்'... 'நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை, தயாரிப்பாளர் ஒருவர் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நடிக்க சான்ஸ் தர்றேன்’... ‘ஆசைகாட்டி, தயாரிப்பாளர் செய்த பகீர் காரியம்'... 'நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'!

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் டிக்கு ஜெய்ஸ்வால். இவர் இந்தி பட தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சினிமாவின் பொதுவான வாட்ஸ் அப் குரூப்பில், 34 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து ஜெய்ஸ்வால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, அந்தப் பெண்ணை காஃபி ஷாப் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஒருநாள் படத்திற்கான பேச்சுவார்த்தைக்கு தனது வீட்டிற்கு இரவு விருந்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இதனை நம்பிய அப்பெண் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அப்பெண்ணிடம், தான் எடுக்க உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரம் தருவதாக, சாதுர்யமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 மாதமாக அப்பெண்ணுடன் தனியாக ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இதைத்தவிர அப்பெண்ணிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வியாபாரத்திற்காக என்று கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று உள்ளார்.

நாளடைவில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்யும் படி அவரிடம் வலியுறுத்தி வந்ததால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில்  அப்பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள், அதற்கான வலைத்தளத்தில் வைரலாக பரவி இருப்பதாக அவருக்கு தெரியவந்தது. அந்த ஆபாச புகைப்படங்கள் எல்லாம் ஜெய்ஸ்வாலால் எடுக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வது பிடிக்காமல், டிக்கு ஜெய்ஸ்வால் தான் தனது ஆபாச புகைப்படத்தை, ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்ததையும், அந்தப் பெண் அறிந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அம்போலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட தயாரிப்பாளர் டிக்கு ஜெய்ஸ்வாலை கடந்த புதன்கிழமையன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PRODUCER, BOLLYWOOD, ACTRESS, PORNWEBSITE