அஞ்சு வருசமா உருகி காதலிச்ச இளம் பெண்ணை.. பட்டப்பகலில் கொலை செய்த இளைஞர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம், முருகேஷ்பால்யா என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் லீலா என்ற பட்டதாரி பெண் பணிபுரிந்து வந்தார். அதே போல், டோம்லூரில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் தினகர் என்ற இளைஞரும் பணிபுரிந்து வந்தார்.

அஞ்சு வருசமா உருகி காதலிச்ச இளம் பெண்ணை.. பட்டப்பகலில் கொலை செய்த இளைஞர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | கேக் வெட்டுறப்போ நடந்த சுவாரஸ்யம்.. திடீர்ன்னு எழுந்த சிரிப்பலை.. திரும்பி முதல்வர் MK ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!!

அப்படி இருக்கையில், தினகர் மற்றும் லீலா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களின் திருமணம் குறித்து வீட்டில் பேசவும் தினகர், லீலாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, தனது பெற்றோரிடம் தினகரை திருமணம் செய்வது குறித்து லீலா தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல சமுதாயத்தை காரணம் காட்டி அவர்கள் திருமணத்தை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி தனது காதலனான தினகரிடம் பெற்றோர் கூறிய விஷயத்தை லீலா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆவேசம் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதே போல, கோபத்தில் இருந்த தினகர், லீலா வேலை பார்க்கும் நிறுவனத்தின் வாசலிலும் காத்திருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, வழக்கம் போல வேலை முடிந்து லீலா திரும்பி உள்ள சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை அவரது காதலர் தினகர் செய்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐந்து ஆண்டுகளாக காதலித்த காதலி என்றும் பாராமல், லீலாவின் உடலில் குத்தியதாக தகவல்கள் கூறுகின்றது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த லீலாவை குத்தி விட்டு அங்கிருந்து தினகரும் தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த சூழலில், அவர்கள் உடனடியாக லீலாவை மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், லீலா கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தினகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | CM ஆனதுக்கு அப்புறம் பார்த்த முதல் படம்.. மிசா -ல இருக்குறப்போ நானும் அந்த கொடுமையை அனுபவிச்சுருக்கேன்.. MK ஸ்டாலின் ஷேரிங்ஸ்!!

BENGALURU, WOMAN, LOVER, PARENTS, MARRIAGE

மற்ற செய்திகள்