‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ஒரே காரில் பயணித்த ‘8 இளைஞர்களுக்கு’.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நண்பருடைய திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ஒரே காரில் பயணித்த ‘8 இளைஞர்களுக்கு’.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்..

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் டேஸ்பூர் பகுதியில் நடைபெற்ற நண்பர் ஒருவருடைய திருமணத்திற்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது வேகமாகச் சென்ற அவர்களுடைய கார் மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த 8 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, ASSAM, CAR, LORRY, FRIENDS, MARRIAGE, DEAD