"பும்ரா இவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறாரா??.." இணையத்தில் 'வைரல்' அடித்த 'தகவல்'... நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 'தாயார்' என்ன சொல்கிறார் பாருங்க!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே தற்போது டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

"பும்ரா இவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறாரா??.." இணையத்தில் 'வைரல்' அடித்த 'தகவல்'... நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 'தாயார்' என்ன சொல்கிறார் பாருங்க!!!

டெஸ்ட் தொடருக்கு அடுத்தபடியாக, இரு அணிகளுக்கும் இடையேயான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இதில், டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் வரை அணியில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கடைசி டெஸ்டில் பங்கேற்காமல், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துக் கொண்டு தொடரில் இருந்து விலகினார்.

மேலும், அவர் டி 20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டு வருகிறது. என்ன காரணத்திற்காக பும்ரா தொடரில் இருந்து விலகினார் என்பது சரிவர தெரியாத நிலையில், அவர் தனது திருமணத்திற்கு தயாராவதாக தான் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமில்லாமல், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனைத் தான் பும்ரா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த காலங்களில், இருவரும் காதலித்து வருகிறார்கள் என ஒரு தகவல் அவ்வப்போது பரவி வந்தது. இதையடுத்து, பும்ரா விடுப்பு எடுத்துக் கொண்டு விலகிய ஒன்றிரண்டு நாட்களில், அனுபமா பரமேஸ்வரன், தற்போது தான் விடுப்பில் இருப்பதாக இன்ஸ்டாக்ராமில் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சென்று கொண்டிருப்பதாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். பும்ராவின் சொந்த ஊர் குஜராத் என்பதால், அனுபமாவை தான் பும்ரா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை நெட்டிசன்கள் உறுதியாக, கடந்த சில தினங்களாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இணையத்தில் வலம் வரும் தகவல் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயார் சுனிதா பரமேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். 'பும்ராவும், அனுபமாவும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாவில் பின்தொடர்வதை விரும்பாத சிலர் தான், இருவரையும் இணைத்து செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். அனுபமாவை மறந்திருக்கும் போது, அவர் குறித்த புதிய கதை உருவாகும். இதற்கு முன்பும், அனுபமா மற்றும் பும்ராவை இணைத்து எழுதினார்கள்.

அதன் பிறகு தான், இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒருமுறை, விடுதி ஒன்றில் அனுபமா படப்பிடிப்பிற்காக தங்கியிருந்தார். அதே விடுதியில் தான் பும்ராவும் தங்கியிருந்தார். அப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது மீண்டும் இருவரையும் பற்றி ஏன் அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன என்பது எங்களுக்குப் புரியவில்லை.

தற்போது கூட, படப்பிடிப்புக்கு வேண்டித் தான் அனுபமா ராஜ்கோட் சென்றுள்ளார். பும்ரா மற்றும் அனுபமாவை இணைத்து வரும் வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகத் தான் பார்க்கிறோம்' என சுனிதா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், பும்ரா - அனுபமா திருமணம் என்பது வெறும் வதந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது.

மற்ற செய்திகள்