'ஜாப் வேணும்னா எங்க கூட வா...' '16 வயது சிறுமியை ரூம்ல அடைச்சு வச்சு...' - 10 ஆண்கள் சேர்ந்து செய்த பாலியல் வன்கொடுமை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் வேலை வாங்கி தருவதாக கூறி, 16 வயதான உறவினர் பெண்ணை அழைத்து சென்று பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஜாப் வேணும்னா எங்க கூட வா...' '16 வயது சிறுமியை ரூம்ல அடைச்சு வச்சு...' - 10 ஆண்கள் சேர்ந்து செய்த பாலியல் வன்கொடுமை...!

பாதிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமி ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி பகுதியை சார்ந்தவர். வறுமையில் வாடும் சிறுமியின் குடும்பத்தை பற்றி தெரிந்த அவரது துரத்து உறவினர் பெண்ணான அனிதா என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த மாதம் ஜூன் 23 அன்று சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் வேறு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியும் தன் பெற்றோரிடம் இதுகுறித்து அறிவிக்காமல் அனிதாவை நம்பி அவருடன் பயணித்த்துள்ளார்.

இந்நிலையில் அனிதா என்பவர், சிறுமியை ஆட்டோவில் ஏற்றி ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் ரிதியாக துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டுமல்லாமல் போதைப்பழக்கம் கொண்ட 10 ஆண்களும் சேர்ந்து பல நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாயார் தனது மகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஜூலை 12 ம் தேதி கோருகொண்டா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்ததாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 15 அன்று, சிறுமி தானாகவே வீடு திரும்பியுள்ளார். அதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகே தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி, குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்,  ஜூலை 18 காவல்துறையினரை அணுகி, தங்கள் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறி எஃப்.ஐ.ஆரைப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுமிக்கு ஏற்பட்ட குற்றத்தை அறிய அவரது மருத்துவ பரிசோதனைக்கும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர் என வடக்கு மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.என்.ராவ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை கடத்தி சென்ற அனிதா, ஜூன் 23 அன்று தானாகவே சிறுமியை வீட்டில் இறக்கிவிட்டு தனது கிராமத்திற்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திங்களன்று, 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம், போக்ஸோ சட்டம் மற்றும் எஸ்.சி எஸ் டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் சிறுமியின் குடும்பத்தாரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்