Kaateri Mobile Logo Top

ரோடு மேல இருந்த பெரிய குழி.. வியந்து போய் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ரியாக்ஷன்.. "அப்படி என்ன அதுல இருக்கு??"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

ரோடு மேல இருந்த பெரிய குழி.. வியந்து போய் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ரியாக்ஷன்.. "அப்படி என்ன அதுல இருக்கு??"

Also Read | "வாழ்க்கை ரொம்ப சிறியது".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அருமையான புகைப்படம்.. ஒரே போட்டோ-ல Life பத்தி சொல்லிட்டாரே..!

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

இந்நிலையில், தற்போது நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா கொடுத்துள்ள ரியாக்ஷன், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்யும் நேரத்தில், சாலைகள் முழுவதும் குழிகளாக மாறி, வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக அமையும்.

anand mahindra reacts to pothole in roads with smiley

வெளிநாடுகளில் இது போன்று சாலைகளில் ஏற்படும் குழிகளை சரி செய்ய, பல புதுமையான தொழில் நுட்பங்களை கொண்டு சரி செய்வார்கள். அப்படி ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இது போன்று ஒரு வழி தான் இந்தியாவில் சாலைகளுக்கு தேவை என குறிப்பிட்டிருந்தார். அவர் பகிர்ந்த வீடியோவில், சாலைகளில் உள்ள விரிசல்களின் மேல், நீர் புகாத சீட் போன்ற கவர் ஒன்று செயல்படுகிறது. இவை, அந்த குழிகளையே சரி செய்யவும் வழி செய்கிறது.

anand mahindra reacts to pothole in roads with smiley

இதனைத் தொடர்ந்து, ஆனந்த் மஹிந்திரா பதிவு குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளையும் தெரிவித்தனர். அபப்டி ஒரு நபர், இந்தியாவில் உள்ள குழிகள் பெரிதாக இருப்பது தான் பிரச்சனை எனக்கூறி, இந்தியா மேப் வடிவில் இருக்கும் சாலை புகைப்படம் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். இதனை கவனித்த ஆனந்த் மஹிந்திரா, இங்குள்ள சாலை இந்திய மேப் வடிவில் இருப்பதால், ஆச்சரியத்தில் இருப்பது போல, "😱" என்ற ஸ்மைலியை கொண்டு ரியாக்ட் செய்துள்ளார்.

இது தொடர்பான பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "உங்க ஆசீர்வாதம் வேணும்.." தமிழர் போட்ட ட்வீட்.. மனதை வென்ற ஆனந்த் மஹிந்திராவின் 'Reply'!!.. வைரலாகும் பதிவு!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA TWEET, POTHOLE, ROAD

மற்ற செய்திகள்